Sujatha


சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்


பொருளடக்கம்
1 வாழ்க்கைக் குறிப்பு
2 புனைபெயர்
3 ஆக்கங்கள்
3.1 புதினங்கள்
3.2 குறும்புதினங்கள்
3.3 சிறுவர் இலக்கியம்
3.4 சிறுகதைத் தொகுப்புகள்
3.5 சிறுகதை மற்றும் குறும்புதினத் தொகுப்புகள்
3.6 கவிதைத் தொகுப்பு
3.7 நாடகங்கள்
3.8 கட்டுரைத் தொகுப்புகள்
4 திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
5 பணியாற்றிய திரைப்படங்கள்
6 மறைவு
7 மேற்கோள்கள்
8 வெளி இணைப்புகள்
வாழ்க்கைக் குறிப்பு
சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.

இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

புதினங்கள்
அகவரிசையில் . . .

அப்ஸரா
அனிதா இளம் மனைவி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
அனிதாவின் காதல்கள்
ஆ..!
ஆதலினால் காதல் செய்வீர்
ஆயிரத்தில் இருவர்
உன்னைக் கண்ட நேரமெல்லாம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
எதையும் ஒருமுறை
எப்போதும் பெண்
என்றாவது ஒரு நாள்
ஏறக்குறைய சொர்க்கம்
என் இனிய இயந்திரா
ஒருத்தி நினைக்கையிலே
ஒரு நடுப்பகல் மரணம்
ஓடாதே!
கணேஷ் x வஸந்த்
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001
கம்ப்யூட்டர் கிராமம்
கரையெல்லாம் செண்பகப்பூ
கனவுத்தொழிற்சாலை
காசளவில் ஓர் உலகம், வாசகர் வட்டம், சென்னை.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காயத்ரி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
கொலையுதிர்காலம்
கொலை அரங்கம்
சில வித்தியாசங்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
சில்வியா
செப்டம்பர் பலி
சொர்க்கத்தீவு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
திசைகண்டேன் வான்கண்டேன்
தேவன் வருகை, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
நிலா நிழல்
நிர்வாண நகரம்
நில் கவனி தாக்கு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
நில்லுங்கள் ராஜாவே
நைலான் கயிறு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பதவிக்காக
பதினாலு நாட்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பாதிராஜ்யம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பிரிவோம் சந்திப்போம் (நூல்)
ப்ரியா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
மறுபடியும் கணேஷ், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
பெண் இயந்திரம்
பேசும் பொம்மைகள்
மாயா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
மீண்டும் ஜீனோ
மூன்று நிமிஷம் கணேஷ்
மேகத்தைத் துரத்தினவன், மாலைமதி, நவம்பர் 1979
மேற்கே ஒரு குற்றம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
யவனிகா
ரத்தம் ஒரே நிறம்
வசந்தகாலக் குற்றங்கள்
வண்ணத்துப்பூச்சி வேட்டை
வஸந்த்!வஸந்த்!
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
விபரீதக் கோட்பாடு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
வைரம் (புதினம்)
ஹாஸ்டல் தினங்கள்
ஜன்னல் மலர்
ஜே.கே., குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
24 ரூபாய் தீவு
6961, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
குறும்புதினங்கள்
தீண்டும் இன்பம்
குரு பிரசாத்தின் கடைசி தினம்
ஆகாயம்
காகித சங்கிலிகள்
மண்மகன்
மோதாமல் ஒரு நாளும் இரக்க வேண்டாம்ok
சிறுவர் இலக்கியம்
"பூக்குட்டி"
சிறுகதைத் தொகுப்புகள்
தூண்டில் கதைகள்
நகரம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001
நிஜத்தைத் தேடி.
வானமென்னும் வீதியிலே, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
சிறுகதை மற்றும் குறும்புதினத் தொகுப்புகள்
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத் தொகுப்பு
நைலான் ரதங்கள்
நாடகங்கள்
டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
கடவுள் வந்திருந்தார்
பாரதி இருந்த வீடு
ஆகாயம்
கட்டுரைத் தொகுப்புகள்
கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ? [பாகம் 1,2]
சுஜாதாட்ஸ்
இன்னும் சில சிந்தனைகள்
தமிழ் அன்றும் இன்றும்
உயிரின் ரகசியம்
நானோ டெக்னாலஜி
கடவுள்களின் பள்ளத்தாக்கு
ஜீனோம்
திரைக்கதை எழுதுவது எப்படி?
தமிழ் அன்றும் இன்றும்; உயிர்மை பதிப்பகம், சென்னை
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்)
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
ஆனந்த தாண்டவம்
சைத்தான்(திரைப்படம்)
பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஜீன்ஸ்
உயிரே
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி த பாஸ்
எந்திரன்
வரலாறு
செல்லமே
மறைவு
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump

Publised under a Creative Commons Attribution 4.0 International license.